Description
விவேக்சங்கர்
ஒரு காலத்தில் மக்களின் மனங்களில் வீரத்தையும், உத்வேகத்தையும் ஊட்டியவை நாடகங்கள். காரணம், நாடகக் கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் யதார்த்தத்தை எடுத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்க முடிந்தது. இப்போது வரலாற்று நாயகர்கள் பற்றிய நாடகங்கள் மங்கிப் போய், நகைச்சுவைக்கும் சமூகக் கருத்துகளுக்குமான களனாக நாடக மேடை மாறிப்போயுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலை நிலவும்போது, துணிந்து ஒரு வரலாற்று நாயகனின் கதையைக் கையில் எடுத்து, அதை இன்றைய சமூகச் சூழ்நிலையோடு இணைத்து நாடக மேடையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் இந்த நாடக ஆசிரியர் விவேக் சங்கர். எளிய கதையம்சம்தான் என்றாலும், இந்த நாடகத்தைப் பார்த்த பல்லாயிரம் உள்ளங்களை விவேகானந்தரின்பால் இழுத்துச் சென்ற அதிசயத்தை நிகழ்த்தியது. அந்த நாடகமே இந்த நூலாக மாறியிருக்கிறது. சினிமாவில் நடிக்கும் கதாநாயகன் ஒருவன், தன் புகழின் மீது இருந்த இறுமாப்பால், மற்றவரைத் துச்சமாக எண்ணுகிறான். இந்த நிலையில் அவனுடைய அகம்பாவத்தை நொறுக்குவதற்காக குறுக்கு வழியில் ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் அவனுக்கு சுவாமி விவேகானந்தரின் வேடத்தைப் போட்டு சினிமா தயாரிக்க முயல்க
ரூ.35/-
Reviews
There are no reviews yet.