Description
நலங்கிள்ளி
கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு,இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல்.அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி,தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது.கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை.திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார்.கடுமையான உழைப்பும்,தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது.பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார்.தமிழில் இது ஒரு புதிய முயற்சி.
ரூ.300/-
Reviews
There are no reviews yet.