Description
க.ரத்னம்
உலகெனும் மாபெரும் அடந்த காட்டின் நுண்ணுயிர்ப் பிரதி இந்த டப்ளின் நகரம்-யுலிஸிஸ் நாயகன் ப்ளுமின் ஒரு நாள் அனுபவங்கள் அவனது ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமானதாக விரிவதைப் போல,இக்கதைகளின் மாந்தர்கள் அடையாளமற்றவர்கள்,ஜன்னல் வழி தென்படும் துண்டு வானமே முழு பிரபஞ்சம் என மயங்குபவர்கள்.எதையும் எதிர்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ கூட தயங்குபவர்கள்,மரணத்தை சந்திக்கும் வரை.அயர்லாந்தின் மத்திய தர வாழ்க்கையை பிரதான களமாகக் கொண்ட இப்பதினைந்து கதைகளும் ஐரிஷ் தேசியவாதம் உச்சத்தில் இருந்த போது எழுதப்பட்டவை.நிலையற்ற மனம் உடையவராகவும் பெரும் குடிகாரராகவும் வாழ்ந்தை ஜாய்ஸ்,கத்தோலிக்க மதம் மனிதனின் அடிப்படை இச்சைகள் மீது செலுத்திய ஆதிக்கத்தையும் அதன் விளைவான குற்றவுணர்ச்சியையும் தனது கதைகள் வழியாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்.சுயசரிதத்தன்மை மிகுந்த”டப்ளினர்ஸ்”எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்த பின்னும் டப்ளின் நகரம் இந்நூல் வாயிலாக உலகெங்கும் உள்ள இலக்கிய வாசகர்களை தன்பால் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது.
ரூ.180/-
Reviews
There are no reviews yet.