Description
பதஞ்சலி
அறுதியிட்டுக் கூறமுடியாத, மிகவும் பழமை வாய்ந்தது இந்து சமயம். பாரோர் போற்றும் பண்பாட்டையும், கலாசாரத்தையும், வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயத்தின் அருமைகளும் பெருமைகளும் இன்றளவும் போற்றுதலுக்குரியதாக பிராகசிக்கக் காரணமானவர்கள், புண்ணிய பாரதத்தில் உதித்த ஞானிகளும், மகான்களும்தான். வேத காலம் முதலே நன்மை, தீமை தெரியாமல் தடுமாறும் மனிதகுலத்தை நெறிப்படுத்தி, வழிநடத்திச் செல்ல, இறைவன், ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித உருவில் இந்தப் பூவுலகில் தோன்றி, தன் வாழ்க்கை முறையாலும், உபதேசங்களாலும் மானிட சமுதாயத்தை வளம் பெறச் செய்து வழிநடத்துகிறார். வாழ்க்கையின் தத்துவத்தையும், இறைவனின் பெருமைகளையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள்&பாடல்கள் மூலம் மக்களிடம் பரப்பிய மகான்கள் நிறைய பேர். அவர்களில் வழிபாட்டுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்களாக உள்ள இருபத்தைந்து மனித தெய்வங்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும், மகத்துவங்களையும், மனித சமுதாயத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளையும் பற்றிய கட்டுரைகள், சக்தி விகடனில் ‘புனித பூமியில் மனித தெய்வங்கள்!’ என்ற தலைப்பில் தொடராக வந்தன. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மகோன்னதமான மகான்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அனைவருமே படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது.
ரூ.90/-
Reviews
There are no reviews yet.