Description
பா.சு.ரமணன்
விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, ஆன்ம ஞானியாக உயர்ந்த மகாயோகியின் வாழ்க்கைச் சரிதம். வங்காளம் தந்த மகான்கள், வீரர்கள், இலக்கியவாதிகள் அனைவரின் ஒட்டுமொத்த உருவமாகத் தோன்றியவர் மகாயோகி அரவிந்தர். தந்தையின் விருப்பப்படி, ஆங்கிலப் பழக்க வழக்கங்களோடு, இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டவர். ஒரு கட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கரிய மேகங்கள் இவரையும் சூழ்ந்தபோது, ஆர்வமுடன் அதில் தன்னை கரைத்துக் கொண்டவர். அரசியல் தாகம் மிகுந்து, நாடு விடுதலை பெறவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் இந்தியாவில் கால் வைத்த அரவிந்தருக்கு, இறுதியில் ஆன்ம தாகம் மிகுந்து மனித வாழ்வின் விடுதலையைக் காணுகின்ற யோகம் கைவரப் பெற்றது ஆச்சரியமானது… மெத்தப் படித்தவர். சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். இரக்க குணம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். எழுத்தாளர். பத்திரிகையாளர். சுதந்திரப் போராட்ட வீரர்… இப்படி பல முகங்கள் அரவிந்தருக்கு உண்டு. ஆனால் இவற்றில் எதுவும் ஒட்டாத, சொல்லப் போனால் இந்த முகங்களுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாக விளங்குவது அவரது பிற்கால வாழ்வின் யோகத் திருமுகம். அரவிந்த
ரூ.60/-
Reviews
There are no reviews yet.