நான் நீ மீன்

கலாப்ரியா நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக்காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும் தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவிதை மொழியினைத் தொடர்ந்து புதிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதன் வழியே ஒரு புதிய வாசிப்பனுபவத்தை இத்தொகுப்பில் கலாப்ரியா உருவாக்குகிறார். ரூ.50/-