இனத்துவேசத்தின் எழுச்சி

சேனன் இலங்கையில் 2009 தமிழினஅழித்தொழிப்பிற்குப் பிறகான அரசியல் சூழல்களை இந்த நூல் விரிவாக ஆராய்கிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழர் அமைப்புகள் முன்னால் இருக்கக்கூடிய சவால்கள், இலங்கை அரசின் கபட நாடகங்கள், பொதுபல சேனா போன்ற அமைப்புகள் மூலமாக புதிய வடிவம் பெறும் சிங்கள இனவாதம், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களின் பரிமாணங்கள் என சேனன் ஈழப் பிரச்சினையின் சமகால சிக்கல்களை மிக நுட்பமாக இந்த நூலி¢ல் பரிசீலிப்பதுடன் இந்தப் போராட்டத்தின் எதிர்கால திசைவழிகள் குறித்தும் தனது பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.90/-