ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்

தீபச்செல்வன் நிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப்பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை. மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சரிக்கையாக இருப்பவை. ஓர் இலக்கியவாதி வரலாற்றாளனின் பாத்திரத்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பத்தை தீபச்செல்வன் உண்மையுணர்வுடன் கடமையாற்றியிருக்கிறார். ரூ.80/-