இரா.சிசுபாலன் தமிழகத்தில் முருகன், விநாயகர், அம்மன் போன்ற ‘கடவுள்களை’ வணங்குபவர்கள் தங்களை ‘இந்துக்கள்’ என்றும் தங்கள் மதம் ‘இந்துமதம்’ என்றுதான் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ‘இந்துத்துவா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகள் கடைப் பிடித்துவரும் கொள்கைகள் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை கருப்பண சாமியையோ, முனியப்ப சாமியையோ வழிபடுவர் ‘கிடா வெட்டி பொங்கல் வைப்பர்; ஆனால் ‘இந்துத்துவா’ பேசுபவர்களோ மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்ட கோட்சேக்கு படையல் வைப்பவர்கள். அவர்கள் யார், அவர்கள் யாருடைய நலுனுக்காக பணியாற்றுகின்றனர் அவர்களுது மகவெறியன் அடிப்படை என்ன என்பது போன்ற சந்தேகங்களை வினா – விடை வடிவில் எளிய தமிழில் விளக்கும் நூல். ரூ.15/- Tags: அரசியல், இரா.சிசுபாலன், பாரதி புத்தகாலயம்
No Comments