தேகம்

சாரு நிவேதிதா வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்ரவதையின் தொழில்நுட்பம் நுணுக்கமாகத் தொடர்ந்து மாறுதலடைந்து வந்திருக்கிறது. சித்ரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது, ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாரு நிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம், அந்த உலகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான். ரூ.90/-

ரசிகன்

ஆர். அபிலாஷ் கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக்கொள்பவனின் கதை இது. இன்னொருபுறம் இந்நாவல் முழுமையான தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகையில் எப்படியான பதற்றத்தை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது. ரூ.350/-

உண்மைக்கு முன்னும் பின்னும்

சிவகாமி தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை- ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது. ஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நான்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். ரூ.270/-

மாலு

சுப்ரபாரதி மணியன் வேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும், துயரங்க ளையும் மலேசிய நாட்டுப் பின்னணியில் இந்நாவல் விவரிக்கிறது. மரணதண்டனைக்கு எதிரான குரலையும் எழுப்புகிறது. ரூ.80/-

அவ்வுலகம்

வெ.இறையன்பு இறையன்புவின் இந்த நாவல் மகத்தான மனித வாழ்வை அற்ப காரணங்களுக்காகச் சீரழித்துக்கொள்ளும் மனிதர்களின் அறியாமையைப்பற்றிப் பேசுகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் மனிதர்கள் ஒரு நாள் பதிலளிக்க முடியாத கேள்விகளின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதைப்பற்றிப் பேசுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருள் எனத் தோன்றும் மரணமே மனிதனுக்கு மகத்தான வெளிச்சத்தைக் கொண்டுவரும் அற்புதத்தைப் பற்றிப் பேசுகிறது. ரூ.140/-

ஐந்து முதலைகளின் கதை

சரவணன் சந்திரன் தங்கத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றின் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயற்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் இதுவரை சொல்லப்படாத நிலங்கள், நாடுகள் வழியே ஒரு புதிய கதையைச் சொல்கிறது. செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தேடி புதிய தடங்களில் பயணம் செய்யும் மனிதர்களின் சவால்களும், தன்னையே பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டங்களும் இந்த நாவலை மிகுந்த சுவாரசியமுடையதாக்குகின்றன. மனிதர்களின் ஆழம் காண முடியாத மனோவிசித்திரங்களை சரவணன் சந்திரன் மிக நுட்பமாக சித்தரிக்கிறார். ரூ.150/-

புத்துமண்

சுப்ரபாரதி மணியன் சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய ஒருவரின் லௌகீக வாழ்க்கையின் சரிவையும் சமூக வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாததையும் அடுத்த தலைமுறை குறித்த அவரது அக்கறை சார்ந்த செயல்பாடுகளையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது. ரூ.100/-

சென்னைக்கு மிக அருகில்

விநாயக முருகன் பிம்பங்களுக்கும் நிஜங்களுக்கும் ஓயாத போராட்டம். பிம்பங்கள் சரிந்து அம்பலமாகும்போது அந்த நிர்வாணத்தைப் பணமாக மாற்ற விழையும் ஊடகங்கள், குடும்பங்களுக்குள் ஊடகங்கள் ஏற்படுத்தும் பண்பாட்டு உளவியல் சிக்கல்கள், விபரீதமான உறவுகளுக்குப் பின்னால் படியும் குற்றங்கள், தொழில் போட்டியில் யாரோ சில மனிதர்கள் எங்கோ பின்னிவைத்த சிலந்தி வலையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி விவசாயிகள் என அனைவரும் ஒரு புள்ளியில் சேரும் இடமும் விலகும் இடமுமே இந்த நாவலின் மையக்கரு. ரூ.320/-

துயில்

எஸ். ராமகிருஷ்ணன் வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார். இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை. ரூ.460/-

சஞ்சாரம்

எஸ். ராமகிருஷ்ணன் கலைகள் என்பது எப்போதும் உன்னதங்களின் மீது கட்டப்படும் மகத்தான அனுபவங்கள் அல்ல. கலைகள் தரும் மன எழுச்சிக்குப்பின்னே அதைப் படைப்பவர்களின் இருண்ட நிழல்கள் அசைந்துகொண்டிருக்கின்றன. இந்த நாவல் வறுமைக்கும் அவமானங்களுக்கும் வீழ்ச்சிக்கும் நடுவே கலையின் மாபெரும் வெளிச்சத்தை ஏந்தி நடந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. கரிசல் பூமியின் சங்கீதம் என்பது ஓசைகளால் ஆனதல்ல, அது வாசனைகளால் நிரம்பியது என்பதுதான் இந்த நாவலின் மையப் படிமம். அது ஆற்ற முடியாத மனித துயரத்தின் வாசனை. மனித மனதின் பிரகாசமான தருணங்களின் வாசனை. எந்த ஒரு அகங்காரத்தையும் அதிகாரத்தையும் மனம் உடையச் செய்து கரையவைக்கும் வாசனை. அந்த வாசனையின் வழியே இந்த நாவல் தமிழ்வாழ்க்கையின் இதுவரை சொல்லப்படாத கதைகளைச் சொல்கிறது. சாதிய சமூகத்தின் வெறுப்புக்கும் கீழ்மைகளுக்கும் நடுவே தமிழ்ச் சமூகத்தின் கலைகளின் மீது படிந்த புழுதிகளையும் வெளிச்சங்களையும் இந்த நாவலில் எழுதிச்செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் எந்த ஒரு அவலமும் மனிதனின் கலை சார்ந்த கனவுகளை அழித்துவிடமுடியாது என்பதை ஒரு பிரமாண்டமான சித்திரமாக உருவாக்கிக் காட்டுகிறார். ரூ.375/-