கு.அழகிரி சாமி கடிதங்கள்

கி. ராஜநாராயணன் கு.அழகிரிசாமி கி. ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த ‘கு. அழகிரிசாமி கடிதங்கள்’ தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்களும் இடம்பெறுகின்றன. நேசத்தின் இடையறாத பெருக்கு கொண்ட இக்கடிதங்கள் இசை, இலக்கியம், அன்றாட வாழ்வின் தத்தளிப்புகள் என விரிந்து கு.அழகிரிசாமியின் ஆளுமை குறித்து மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றன. ரூ.140/-

காற்று கொணர்ந்த கடிதங்கள்

தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்களைவிட எழுத்தின் வழியே பேசுவது என்பது நீடித்த, நிலைத்த பேச்சாக இருக்கிறது. சில கடிதங்கள், நம்மை உணர்விழக்கச் செய்கின்றன. என்னை அறிந்தவர்களும், அறியாதவர்களும் எனக்கு எழுதிய கடிதங்கள் அளித்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை, விமர்சனத்தை நான் எளிதில் இழக்க முடியாது. அந்த உணர்ச்சிகளை, சிலிர்ப்பை அப்படியே பாதுகாக்க விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன் ரூ.40/-

அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)

கி. ராஜநாராயணன் தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது (!) இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு! என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்துவிட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு. -முன்னுரையிலிருந்து கி.ரா. ரூ.190/-

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்

ரசிகமணி டி.கே.சி ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள் மாபெரும் இலக்கியச் செல்வம். ரசனையின் எண்ணற்ற தடங்கள் கொண்டவை அவை. தமிழ் இலக்கிய மரபையும் ஒரு புதிய வெளிச்சத்தில் நமக்குக் காட்டுபவை. ரசிகமணி அவரது வாழ்நாளில் 26 பேருக்கு எழுதிய கடிதங்களின் முழுத்தொகுப்பு தமிழில் முதன்முதலாக வெளிவருகிறது. ஒவ்வொரு இலக்கிய வாசகனின் கையிலும் இருக்க வேண்டிய அரிய கலைக்களஞ்சியம் இது. ரூ.600/-