எது நல்ல பள்ளி?பேசலாம் வாங்க

இல.சண்முகசுந்திரம் இந்திய அரசியல் சாசன இலட்சியங்களான சோசலிசம்,மதசார்பின்மை,ஜனநாயகம் ஆகியவை நிதர்சனமாக வேண்டுமென்றால்,அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளை அளிக்கும் அருகமை பள்ளிகளை கொண்ட பொதுப்பள்ளி முறையே இன்றைய தேவை… ரூ.25/-

வகுப்பறைக்கு வெளியே

இரா.தட்சணாமூர்த்தி “மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம்.குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக்,செல்வம் போன்று எத்தனைபேரைப் பள்ளிகளைவிட்டு விரட்டியது என்பது தெரியாது…” ரூ.40/-

காந்தி:கல்விச் சிந்தனைகள் தொகுப்பு

அண்ணாமலை கல்வி குறித்து சுதந்திர காலத்துக்கு முன்பே பல்வேறு இதழ்களில் காந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இக்காலத்துக்கும் தேவையாகிறது. ரூ.90/-

கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி

வசீலி சுகம்லீன்ஸ்கி மனிதர்களது பழக்கவழக்கங்கள்,சிந்தனை,பகுத்தறியும் உணர்வு,சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச்சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரூ.90/-

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

ஜ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருதல் மிகக் கடினமான முக்கியமான ஒரு பணி.ஐந்து வயதுக் குழந்தையன்று,அம்மாவின் அழைப்பொலியைக் கூடக் கேட்காமல் தன்னையும்,தன் வயதையத்த குழந்தைகளையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கிறவர்களுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.ஆறு வயதுக் குழந்தையைப் பள்ளிக் சிறுவனாக மட்டும் காட்டாமல் ஒரு வளரும் மனிதனாகக் காட்டுவது;இதற்கேற்றபடி ஒவ்வொரு குழந்தையின் உண்மையான வாழ்க்கை,மகிழ்ச்சி அதிருப்தி,தேவைகள்,நாட்டங்கள்,திறமைகள்,நம்பிக்கைகள் ஆகியவற்றைச் கவனத்தில் கொள்வதன் மூலமாக மட்டுமே இவனைப் புரிந்து கொண்டு ஒரு தனிநபர் என்ற வகையில் வளர்க்க முடியும் என்று காட்டுவது…’’போன்ற அம்சங்களைத் தன் கடமைகளாக வரித்துக் கொள்கிறார் ஆசிரியர். 15ஆண்டு கால அனுபவப் பின்புலமுடையவர்;ஓராண்டு காலம்(ஆறு வயதுக் குழந்தைக.ளுக்குக் கல்வி கற்றுத்தரப் பணியாற்றியபோது) 800பக்கங்களுக்கு விரிந்த நாட்குறிப்பின் மடிப்படையில் தயாரிப்பு வகுப்பின் முதல் நாள், 20ம் நாள்84வது நாள், 122வது நாள்,கடைசியாக170வது நாள் பணிப்பதிவுகளையே இந்நூலாக நம்முன் வைத்திருக்கிறார் மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் என் முறையை நான் மேம்படுத்த விரும்பினால்,நானும் ஒருசமயம் மாணவனாக இருந்தேன் என்பதை மறக்கக்கூடாது. ரூ.100/-

எது நல்ல பள்ளி?

த.பரசுராமன் எது நல்ல பள்ளி?எது தரமான பள்ளி?தேர்ச்சி விழுக்காடு மட்டுமா?இசை ஓவியம் விளையாட்டு வேண்டாமா?ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா?ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் போதுமா?பாடத்திட்டம் மட்டும் போதுமா? ரூ.10/-

டேஞ்சர் ஸ்கூல்

அப்பணசாமி குழந்தைகளினால் தாங்க முடியாத பாடத்திட்ட பளுவும்,கசக்கிப் பிழியும் வீட்டுப் பாடங்களும் அவர்களிடம் உடல்,மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.விடுமுறைக் காலத்தை எதிர்நோக்கி உள்ளன அவர்களின் கல்வி நோய்கள். ரூ.90/-

அம்பேத்கர்(கல்வி சிந்தனை)

ரவிக்குமார் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சனைகள் பற்றி பேசுவதோடு ஒவ்வொரு பல்கலை கழகத்துடன் இணைந்ததாக முதல்தரமான நூல் நிலையம் அமைய வேண்டும் என்னும் பரந்துபட்ட கல்வி பற்றிய ஆய்வு அடங்கிய நூல். ரூ.50/-

பெரியார்(கல்வி சிந்தனை)

அ. மார்க்ஸ் கல்வியின் பயன்பாடுகளை இரண்டு முக்கிய விஷயங்களை பெரியார் குறிப்பிடுகிறார்.ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும்,சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று மேன்னையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும். ரூ.90/-

பெட்ரண்ட் ரஸல்(கல்வி சிந்தனை)

பெட்ரண்ட் ரஸல் எந்த ஒரு கருத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும்,அதிகாரத்திலுள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும்,மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பெட்ரண்ட் ரஸல் கருத்தாகும். ரூ.110/-