Description
பி.சுவாமிநாதன்
சக்தியை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று உடல் சக்தி. மற்றொன்று மன சக்தி. நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும் உடற்பயிற்சி செய்து, வாகான உடல் வலிமையை ஏற்படுத்திக் கொள்வதிலும் உடல் சக்தியைப் பெறமுடியும். ஆனால், மன சக்தி என்பது வேறுபட்டது. அது சஞ்சலமற்ற மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதன் மூலம் ஏற்படுவது. நல்ல மன சக்தி கிடைக்க, ஆன்மிக வழிபாடுதான் சிறந்த வழி என்று உணரப்பட்டது. ஆண்டவனைத் தொழுவதால் மனதை ஒருநிலைப்படுத்தலாம். ஆண்டவனை வழிபடுவதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று மனதைக் கோயிலாக்கி வழிப்படுவது. மற்றொன்று ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தொழுவது. நம் மக்கள் வழிப்பாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுபவதையே காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள். கோயில்களைப் பற்றியும் கோயில்களின் சிறப்புகள் பற்றியும் அங்கு வீற்றிருக்கும் வழிபாட்டுக் கடவுள்கள் பற்றியும் சக்தி விகடன் இதழில் பி.சுவாமிநாதன் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இந்தக் கட்டுரைகள் சக்தி விகடன் இதழில் வெளிவந்தபோது, ஆலயங்களைத் தேடித்தேடி தொழ நினைக்கும் பக்தர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆண்டவனைத் தரிசிப்பதற்கும
ரூ.75/-
Reviews
There are no reviews yet.