அருந்தப்படாத கோப்பை

மனுஷ்ய புத்திரன் உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீர் இல்லை. நீங்கள் ஒரு உலர்ந்த இலையைப் போல காற்றில் மிதந்து செல்கிறீர்கள். இந்தக் கவிதைகள் எவ்வாறு வாழ்வின் கிளைகளோடும் மலர்களோடும் தன்னை விடுவித்துக்கொண்டன என்பதன் சாட்சியம்தான் இந்தத் தொகுப்பு. உடைந்த நிலவாகவோ உதிர்ந்த நிலவாகவோ தன்னை உருவகித்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு சந்தோஷமான விவகாரம் அல்ல. ஆனால் ஒரு கவிஞனுக்கு அந்த துக்கம் தரும் இதமும் பரிவும் அவ்வளவு தேவையாக இருக்கிறது. ரூ.80/-

பசித்த பொழுது

மனுஷ்ய புத்திரன் இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ரத்த சிந்தினீர்கள் இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள் இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள் இதைத்தவிர வேறெதையும் பேசவில்லை இந்தக் கவிதைகள். இந்த தொகுப்பில் உள்ள 236 கவிதைகளில் 235 கவிதைகள் 2011ல் ஒன்பதே மாதங்களில் எழுதப்பட்டவை ரூ.350/-

அந்நிய நிலத்தின் பெண்

மனுஷ்ய புத்திரன் காமத்தின் புதிர்ப் பாதைகள் காலத்தின் கொடுங்கனவுகள் கனிதலின் தீராத தத்தளிப்புகள் 512 பக்கங்களில் ஒரு நவகாவியம் ரூ.480/-