நான் ஏன் என் தந்தையை போல் இல்லை

ஆயிஷா இரா.நடராசன் ஆயிஷா.இரா.நடராசன் அவர்கள் மரபணுவியலையும் மானுடப் பரம்பரைப் பண்புகள் குறித்தும் எழுதியுள்ள புதிய நூல்.அறிவியல் வரலாறு,அறிவியல் கோட்பாடுகள்,மூலக்கூறு வேதியியல்,பெண்ணியம்,இயற்கைத் தெரிவு மரபணுவியல் என பல்வேறு மானுட அறிவுப்புலச் செய்திகளும்,அவரின் வழக்கமான மெல்லிய நகைச்சுவைத் தமிழும் ஊடும் பாவுமாக ஓடி நெய்து வந்துள்ள படைப்பு. ரூ.40/- இந்தப் புத்தகத்தை உடனே பெற   

வாங்க அறிவியல் பேசலாம்

ஆயிஷா இரா.நடராசன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்,ரிச்சர்டு டாக்கின்ஸ்,பில் பிரைசன்,பீட்டர் ஹிக்ஸ்,சர்.சி.வி.ராமன்,மேரி கியூரி,கார்ல் சாகன்,நோம் சாம்ஸ்கி போன்ற அறிவியல் துறையின் முன்னணி ஆளுமைகள் அறிவியல் குறித்தும்,அறிவியல் கல்வி குறித்தும் சமூகம் குறித்தும் கொண்டுள்ள உள்ளக் கிடக்கையை அறிந்து கொள்ள வேண்டுமா?மகத்தான இந்த உள்ளங்களோடு சிறிது நேரம் உரையாட வேண்டுமா?ஆயிஷா இரா.நடராசனின் மந்திரப் பேனா உங்களுக்கு இதனை சாத்தியம் ஆக்குகிறது. ரூ.80/-

சார்லஸ் டார்வின்(நாடகம்)

ஆயிஷா இரா.நடராசன் “மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர்.ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்-தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.பாதிரியாருக்குப் படித்து தேவ ஊழியம் செய்யப் போயிருக்க வேண¢டிய டார்வின் பூச்சியினங்களின் ஆராய்ச்சிக்காக பீகிள் என்ற கப்பலேறி ஐந்தாண்டுகள் பயணம் செய்து தென் அமெரிக்காவின் பல பாகங்க்ளுக்கும் சென்று பரிணாம வளர்ச்சி விதிகளோடு திரும்பினார்.டார்வின் பிறந்து வளர்ந்து உருவான கதையை தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் முயற்சியாக இந்நூல் வந்துள்ளது. 1809ஆம் ஆண்டு பிறந்து1882ஆம் ஆண்டு மறைந்த அவருடைய பால்ய காலம் திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் இந்நூல் சொன்னாலும் “ டார்வினை அவருடைய அறிவுக்காகவோ பொறுமைக்காகவோ விடாமுயற்சிக்காகவோ உலகம் போற்றவில்லை.மனித எண்ணத்திலே ஒரு புரட்சியை உண்டுபண்னி விட்டார்.அதனாலேயே உலகத்தாரின் மனதில் சாசுவதமான இடத்தைப் பெற்று விட்டார்“ என்று பொருத்தமான வர¤களுடன் புத்தகம் முடிகிறது.குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண¢டிய புத்தகம். “ ரூ.25/-

விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை

ஆயிஷா இரா.நடராசன் அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன. ரூ.40/-

எளிய10இயற்பியல் சோதனைகள்

ஆயிஷா இரா.நடராசன் கவனி சோதனை செய் விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள். ரூ.20/-

எளிய10வேதியியல் சோதனைகள்

ஆயிஷா இரா.நடராசன் கேள்வியும் பதில்களுமாய் விரியும் இப்புத்தகத்தில் வேதியியல் சம்மந்தப்பட்ட சோதனைகள் மிக எளிமையாய் பகுவாகியிருக்கிறது. ரூ.20/-

மைக்கல் பாரடே

ஆயிஷா இரா.நடராசன் இந்நூலில் அரிய கண்டுபிடிப்பான மின்காந்தத் தூண்டலின் விதியினைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் வாழ்க்கை நாடக வடிவில் விரிகிறது. ரூ.15/-

உலக பெண் விஞ்ஞானிகள்

ஆயிஷா இரா.நடராசன் “மற்ற துறைகளைப் போலவே விஞ்ஞானத் துறையிலும் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது.ஆனால் பெண் விஞ்ஞானிகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.பெரும்பாலும் பெண் விஞ்ஞானிகளும் மிக சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.அந்த இருட்டடிப்பு செய்யப்பட்ட24பெண் விஞ்ஞானிகளைப் பற்றிய அறிமுகமே இந்நூல்.” ரூ.70/-

உலக தொழில் நுட்ப முன்னோடிகள்

ஆயிஷா இரா.நடராசன் “உலகத்தொழில்நுட்ப முன்னோடிகள்” என்ற நூல் எழுத்தாளர் இரா.நடராசன் அவர்களால் எழுதப்பட்டு64பக்கங்களைக் கொண்ட12ஆளுமைகளைப் பற்றிய அற்புதமான நூல்.எல்லாப் பக்கங்களிலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் மாணவர் சமூகம் மட்டுமல்ல,விஞ்ஞானத் தொழில்நுட்பப் பயனாளிகள் கூட அறிந்து கொள்ளப்பட வேண்டியவைதான்.போர்டு என்கிற விஞ்ஞானியின் பெயரில் தார்சாலைகளில் ஓடுகின்ற கார் என்கிற வார்த்தைகள் சாலையைப் பற்றிய,கார் சக்கரமான டயர்பற்றிய,டயரின்தோல் பற்றிய புரிதல்களைப் பல நூற்றாண்டுகளில் எந்த எந்த நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடந்தன என்கிற வரலாற்றை(பக்- 6, 7)இரண்டு பக்கங்களில் ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.மேல்தட்டு மக்கள் மட்டுமே யோசிக்க முடியும் என்கிற நிலையிலிருந்து விவசாய மக்கள் வாங்கும் வகையில் போர்டு “கார்புரட்சி” நடத்தியுள்ளது சமூக முன்னேற்ற நடவடிக்கையாகும்.போர்டு எவ்வித புகழ்பெற்றாலும் எடிசனுக்கும் தனக்குள்ள உறவும் அற்புதமானது என்று போர்டு சொல்வது தோழமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “சொல் உள்ளவர்கள் செல் உள்ளவர்களே” என்கிற வகையில் அதிநவீன புரட்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மொபைல் புரட்சியில் ஓர் அங்கமான மோட்டோ ரலா நிறுவனம் அதன் முதலீடு மற்றும் வீழ்ச்சி பற்றிய பொருளாதாரச் சிந்தனைகளை மாரட்டின் கூப்பர் என்கிற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.அதிக எடை கொண்ட மொபைல்,ஒரு குறுகிய கால இடைவெளியில் எடை குறைவாய்க்கொண்டு வரப்பட்ட விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் கூப்பர்தான் சூப்பர்மேன் என்பதை மொபைல் உபயோகிப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.ஐப்பான் போரில் இருந்து மீண்டெழுந்த வரலாற்றின் நாயகன் ஆக்கியே மோரிடா என்பவரின் விபரமும் அவரது தளராத நடவடிக்கைகளும் நட்புக்கு அவர் தந்த மரியாதையும் போற்றப்பட வேண்டியவை. “பிஷீtவிணீவீறீ” என்கிற வசதியைப்பற்றிய வரலாறும்,ஸபீர் பாட்டியா என்பவரது விஞ்ஞான திலகத்திற்கு சிலை வைக்க வேண்டாம் காந்திக்குத்தான் சிலை வைக்க வேண்டும் என்று ஸபீர் கூறியிருப்பது அவரது அடக்கத்தை உணர்த்துகிறது.விஞ்ஞானி மார்கோனிதான் ரேடியோ என்பதைக் கண்டுபிடித்தார் என்கிற விவரத்தை(ஆனால் பொய்)உண்மைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு உணர்த்தியுள்ள ஆசிரியர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். 1895இல்(ஜெகதீசசந்திர போஸ்)கண்டுபிடித்த பிறகு1896இல் மார்கோனிக்கு உரிமை வழங்கியதை உணர்த்துகிறர்…