அன்னா அக்மதோவா கவிதைகள்

லதா ராமகிருஷ்ணன் அன்னா அக்மதோவாவாவின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான துயரங்களின் சாட்சியமாகவும் மன்னிக்க முடியாத குற்றங்களின் பதிவேடாகவும் நீக்க முடியாத நினைவுகளின் எச்சரிக்கையாகவும் திகழ்கின்றன. தனிமைக்கும் நேசத்திற்கும் கண்ணீருக்கும் கொடுங்கோன்மைக்கும் இடையே இடையறாது தத்தளித்துக் கொண்டிருக்கும் அவரது சொற்கள் நம்முடைய காலத்தின் மகத்தான கவிகளில் ஒருவராக அவரை இனம் காட்டுகின்றன. அன்னா அக்மதோவாவின் பல்வேறு கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் விரிவான தொகுப்பு இது. ரூ.110/-