நீரிலும் நடக்கலாம்

August 11, 2016

எஸ். ராமகிருஷ்ணன்

இந்தச் சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவ் கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் இலக்கியத்தில் செகாவை ஒரு கதாபாத்திரமாக வைத்து எழுதப்பட்ட முதற்கதை இதுவே. குறுங்கதை, நீள்கதை, தனிமொழி, உரையாடல் மட்டுமே கொண்ட கதை, மிகைபுனைவு, மறுகதை, விந்தை என எத்தனையோ மாறுபட்ட கதைகூறும் முறைகளில் புனைவின் முடிவில்லாத சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பை முற்றிலும் புதியதொரு புனைவுத்தளத்திற்குக் கொண்டு சென்றிருப்பதே இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.

ரூ.130/-

 

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *