சி.மோகன் கட்டுரைகள்

கடந்த நாற்பது வருடங்களாக சி. மோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இளம்வயதிலேயே உலகின் மகத்தான ஆக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர் இவர். – சி.மோகன் ரூ.380/-

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார். – ஷங்கர்ராமசுப்ரமணியன் ரூ.110/-

கதையல்ல வரலாறு

வரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள். வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்பட்டவையெல்லாம் உண்மைகள் மட்டும்தானா? இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டும் அல்லாமல் உலக சரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது. வரலாற்றைப் புனைவாக எழுதிடும் ஆசிரியர்கள் பெருகிவரும் வேளையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது. – நாகரத்தினம் கிருஷ்ணா ரூ.80/-

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்

தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது. – வண்ணநிலவன் ரூ.130/-

இவர்கள் இருந்தார்கள்

‘இவர்கள் இருந்தார்கள்’ கட்டுரைகளில் இடம்பெற்ற மனிதர்கள் அனைவரையும் நான் நேரில் அறிவேன். எளிமையாக அறிமுகம் கொண்ட பலர். நெருக்கமான சிலர். இவர்கள் அனைவருமே ஏதோ வகையில் இலட்சிய-வாதத்தின் சில அம்சங்களாவது கொண்டவர்கள். அந்த இலட்சியவாதம் வழியாக வாழ்க்-கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்குக் கலையும் இலக்கியமும் சேவையும் அதற்கான வடிவங்களாக இருந்தன. இவர்களின் நினைவை நிறுத்திக்கொள்ள வேண்டியது எந்த ஒரு சமூகத்-திற¢கும் அவசியமானது. இந்நூல் அதற்கான ஒரு ஆவணம். – ஜெயமோகன் ரூ. 160/-

முதல் இந்திய நாவல்கள்

முதல் நாவலாசிரியர்கள் அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருப்பினும் மனக்கசப்போ குரோதமோ இல்லாமல்தான் எழுதியிருக்கிறார்கள். சமூகம் குறித்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்தாலும் பொதுவாக மனிதர்கள்மீது பரிவுணர்ச்சியே கொண்டிருந்தார்கள். இதை இயல்பாகச் செய்தார்கள். நாவல் வடிவம் ஒருவாறாக நிலைபெற்று அதற்கு விற்பனை சாத்தியம் உண்டு என்று விளங்கிய பிறகுதான் வாசகனை நாடிப் போகும் போக்கு தொடங்கியது. ஆதலால் முதல் நாவல்களில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் உயரிய இலட்சியங்களை மனதில் கொண்டே அந்த நாவல்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. – அசோகமித்திரன் ரூ.110/-

நினைவின் நதியில்

இந்நூலில் நான் இருந்துகொண்டே இருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. ஏனென்றால் இது சுந்தர ராமசாமியின் வரலாறு அல்ல. அவரைப்பற்றிய என் நினைவுகள்தான். நான் அவரை எதிர்கொண்ட புள்ளிகள் மட்டுமே இந்நூலில் உள்ளன. என் வயதின் முதிர்ச்சியின்மை, இயல்பான அசட்டுத்தனங்கள், அறி வார்ந்த தேடல், ஆன்மீகமான தத்தளிப்புகள் ஆகியவை யும் இணைந்தே இந்நூல் உருவாகியிருக்கிறது. 2005இல் எழுதப்பட்ட இந்நூலை இன்று வாசிக்கும் போது இது Ôஜே.ஜே. சில குறிப்புகள்Õ போன்ற ஒரு புனை வாகவும் வாசிக்கப்படலாமென தோன்றுகிறது. பல இடங்களில் நானே புன்னகை செய்துகொண்டேன். சில இடங்களில் ஆழ்ந்த மனநெகிழ்ச்சியையும் அடைந்தேன்.- உதாரணமாக, சுந்தர ராமசாமி ஆலமரத்தைப் பார்க்கும் இடம். அது ஒரு மிகச்சிறந்த நாவலின் தருணத்துக்கு நிகரானது. – ஜெயமோகன் ரூ.220/-

புறப்பாடு

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அர்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனு பவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது அதாவது எழுதும் கணத்தில்  ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன். – ஜெயமோகன் ரூ.380/-

என் பயணம்

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது. இத்தொகுப்பு ஏதாவது ஒரு வகையில் வாசகனுக்கும் என் எழுத்துக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும். இத்தொகுப்பை மட்டுமே காண முடிந்தவர்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளனின் எழுத்துப் பயணம் குறித்து ஒரு கண்ணோட்டம் தரக்கூடுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். – அசோகமித்திரன் ரூ.140/-

பார்வைகள்

உயர்ந்த மதிப்பீடுகளை நாடுபவர்களுக்கு உயர்ந்த கலையும் வசப்படும். இக்கட்டுரைகள் எல்லாமே நல்ல மதிப்பீடுகளை நாடிய படைப்பாளிகள் பற்றியவை. தமிழின் இன்றைய இலக்கிய மேன்மைக்கு இவர்களின் பங்கு கணிசமானது. – அசோகமித்திரன் ரூ.170/-