பெரியார்(கல்வி சிந்தனை)

அ. மார்க்ஸ் கல்வியின் பயன்பாடுகளை இரண்டு முக்கிய விஷயங்களை பெரியார் குறிப்பிடுகிறார்.ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும்,சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று மேன்னையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும். ரூ.90/-

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

அ. மார்க்ஸ் 90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம்.இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக்கூர்மையாக அவதானித்துப் பதிவுசெயது வந்திருக்கிறார்.ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த,அரசியல்,பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.வகுப்புவாத அரசியலுக்கு எதிரான மாபெரும் ஆவணமாகத் திகழும் இந்நூல் மதச்சார்பின்மை,சிறுபான்மையினர் பாதுகாப்பு,பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போரட்டம் எனப் பல தளங்களிலும் விரிந்து,நம் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல தவறான எண்ணங்களையும் பொய்களையும் அழுத்தமாக எதிர்த்துப் போராடுகிறது.புனைவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடிச் செல்கிறது. ரூ.400/-

சோவியத்துக்குப் பிந்தைய உலகம்

அ.மார்க்ஸ் சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அரேபிய வசந்தம், வால் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டங்கள், சோவியத்துக்குப் பிந்திய உலகின் மாற்றங்கள், மீண்டும் ஒரு பனிப்போரின் துவக்கம், உலக இடதுசாரி இயக்கங்களின் இன்றைய நிலை, பல ஸ்தீனப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்கள், இந்திய -& சீனப் பிரச்சினையில் நம் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட உண்மைகள், அண்டை நாடுகளுடனான நம் உறவின் விரிசலின் காரணங்கள் எனச் சமகால உலகைத் தன் கூரிய பார்வையின் ஊடாக அலசுகிறார் அ.மார்க்ஸ். ரூ.130/-

இராணுவமயமாகும் இலங்கை

அ.மார்க்ஸ் 2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களைப் புறக்கணித்து தனது இனவாத ஒடுக்குமுறைகளை பௌத்த- சிங்களப் பேரினவாத அரசு எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை இந்த நூல் ஆழமாக முன்வைக்கிறது. நேரில் சென்று கண்ட அனுபவங்களின் பின்னணியில் இன்றைய இலங்கையைப் பேசும் இக் கட்டுரைகள் ஈழத் தமிழ் இதழ்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவை. மூன்றாவது முறையாக இலங்கை சென்றபோது கூட்டங்களில் பேசக்கூடாது என அ.மார்க்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரூ70/-

கரையும் நினைவுகள்

அ.மார்க்ஸ் பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற இந்த மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த நினைவுக் குறிப்புகள் மார்க்ஸின் தீவிரமான சமூகப் பார்வைகளின் வழியே உருக்கொள்கின்றன. காதலர் தின நினைவுகள், அப்பா வளர்த்த நாய்கள், சினிமா…சினிமா..கரிச்சன்குஞ்சு, ஜெயகாந்தன்: சில நினைவுகள், அல்லாவின் அருளால் என இந்த நூலில் உள்ள பல கட்டுரைகள் அ.மார்க்ஸின் பரந்துபட்ட பார்வைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன. ரூ.115/-

நமது மருத்துவ நலப் பிரச்சி​னைகள்

ஆசிரியர்: அ. மார்க்ஸ்   கடந்த பத்மண்டுகளாக மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப்பார்வையை… ரூ.120/-

முள்கிரீடம்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்   கடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்கம் சார்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையும் பின்னிணைக்கப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துச் சட்டம், போதைப் பொருட்கள் சட்டம், குண்டர் சட்டம் முதலான பல சட்டங்கள் கைவசம் இருந்த போதிலும் இத்தகைய அசாதாரனச் சிறப்பு அதிகாரச் சட்டங்களின் மூலமே அரசுகள் மக்கள் மீதான தமது அதிகாரத்தை எல்லையில்லாததாக்கக் கொள்கின்றன. அரசுகள் அதிகாரத்தை இவ்வாறு பெருக்கிக் கொள்வதன் மூலம் தனது ஜனநாயகத் தன்மையயை இழக்கின்றன. ரூ.90/-

தலித் அரசியல்

ஆசிரியர்: அ.மார்க்ஸ் தலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி, செல்லும் திசை ஆகியன குறித்த கூர்மையான அவானத்துடன் கூடிய ஒரு விரிவான வரலாறாக இது அமைந்துள்ளது. ரூ.200/-

ஆரியக்கூத்து

ஆசிரியர்: அ.மார்க்ஸ் கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது. ரூ.70/-  

சச்சார் குழு அறிக்​கை

ஆசிரியர்: அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு முறை சேகரித்துள்ள முக்கியப் பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள். அட்டவனைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல். ரூ.70/-