கண்ணீரில்லாமல்

August 17, 2016

சுஜாதா

உயிர்மை இதழ் துவங்கப்பட்டபோது அதில் சுஜாதா ‘கண்ணீரில்லாமல் . . .’ என்ற தலைப்பில் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்கக்கூடிய ஒரு தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இத்தொடரில் இத்தொடரில் யாப்பு, சங்ககாலம், காப்பியங்கள், சித்தர்கள், தனிப்பாடல்கள், மேற்கத்திய இசை, கணினித் தமிழ், திரைக்கதை, கிரிக்கெட், க்வாண்டம் இயற்பியல், கர்நாடக சங்கீதம், ஜென் போன்ற பல விஷயங்களை பற்றி எழுதவேண்டும் என்பது அவர் கனவு. ஆங்கிலத்தில் இத்தகைய மிக நேர்த்தியாக எழுதப்பட்ட எளிய அறிமுக நூல்கள் ஏராளமாகக் கிடைக் கின்றன. தமிழில் அத்தகைய சில நூல்களை எழுதவேண்டு மென்பதே அவரது கனவு. ஆனால் இந்தத் தொடர் உயிர்மையின் இதழ்களில் வெளிவந்து பிறகு தற்செயலான காரணங்களால் நின்று போனது. சுஜாதாவின் மறைவிற்குப் பின் இப்போது இந்தத் தொடரில் வெளிவந்த இக்கட்டுரைகள் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. அவரது பரந்துபட்ட அக்கறைகளுக்கு இன்னொரு சாட்சியம் இந்த நூல்.

ரூ.30/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *