நாயக்கர் காலம் (வரலாறும் இலக்கியமும்)

August 16, 2016

அ. ராமசாமி

வரலாறு என்னும் அறிவுத்துறைக்கு மார்க்சியம் கொடுத்த வரையறைகள், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதப் பயன்படுத்திக் கொண்டிருந்த சான்றாதாரங்களைப் போதாமையுடையன என நிறுவிக் காட்டின. அதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளும், வாய்மொழிக் குறிப்புகளின் தொகுப்புகளும் முக்கியமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக இருக்க முடியும் என்பதை ஒத்துக்கொண்டு பல ஆய்வுகள் செய்யப்பட்டன. அத்தகைய ஆய்வுகள் ஒரு தேசத்தின் சமுதாய வரலாற்றை முழுமையாக்கப் பயன்படும். உலகநாடுகளின் இப்பொதுப் போக்கிலிருந்து தமிழ் விலகிச் செல்லவில்லை. கல்விப்புல ஆய்வு முறையியலின் அடிப்படையான கூறுகளை கலை இலக்கியத் திறனாய்வுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வரும் பேரா.அ.ராமசாமியின் இந்த நூல் அத்தகையதொரு ஆய்வு நூலே. தமிழக வரலாற்றில் அதிகம் ஆய்வு செய்யப்படாத நாயக்கர்களின் காலத்தை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை முதன்மையான சான்றாதாரங்களாகக் கொண்டு தமிழகச் சமுதாய வரலாற்றை முழுமையாக்குவதற்குப் பயன்படும் பல முடிவுகளை முன் வைத்துள்ளது.

ரூ.130/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *