காரல் மார்க்ஸ்

வெ. சாமிநாத சர்மா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்து கொள்கிறது.அப்படி ஒரு வாய்ப்பு மார்கஸிக்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவ நம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து,கோழைத் தனங்களைப் புதைத்தார்.பூத் துலகம் காண ஒரு தத்துவத்துக்காய் போராடினார்.மேலும் அத்தத்துவத்தை வித்திடுவதற்காகப் போராடினார்.அதன் பிறகு போராட்டமயமானது.எல்லா மாயங்களும் நிகழ்த்தன.பொருளாதாரத்திலும்,தத்துவதிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய தீரமிக்க போராளியின் வாழ்க்கை வரலாறு இது. ரூ.80/-

மதச்சார்பின்மை

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மதச்சார்பின்மை என்பதன் பொருள் மதத்தையும் அரசியலையும் முற்றிலுமாக பிரிப்பது,மதம் என்பது அதில் நம்பிக்கையுள்ளவரின் முற்றிலும் தனிப்பட்ட நடவடிக்கை என்பதாகும்.மதச்சார்பின்மை என்பதன் பொருள்,மதமானது அரசியலிலிருந்து மதத்தை கல்வியிலிருந்து முற்றிலும் பிரிப்பதுவுமாகும்.அரசியலிலும் நிர்வாகத்திலும் அரசியலிலும் கல்வியிலும் மதத்தை தலையிட அனுமதிப்பதே வகுப்புவாதமாகும் ரூ.20/-

கிராமப்புற ஏழைகளுக்கு லெனின்

லெனின் சிறு விவசாயி அதிகாலையில் எழுந்து இரவுவரை உயிரைவிட்டு உழைக்கிறான் என்றால் அவனது வறுமை மற்றும் தேவைகள் தான் அவ்வாறு உழைக்க நிர்பந்திக்கின்றன.இதனைத்தான் எளிமையான வாழ்க்கை லாபகரமான விசாயம் என்றெல்லாம் வானளாவ புகழ்கின்றனர்.அவன் ஒரு ரொட்டித் துண்டை தின்றுவிட்டு வேலைக்குப் போகிறான்.எண்ணி எண்ணி செலவு செய்கிறாள்.ஒரு ஜோடி ஆடை களையே மூன்று வருடம் மாற்றி மாற்றி அணிந்துகொள்கிறான்.தகிகும் கோடையில் செருப்பின்றி நடக்கிறான்.உடைந்து போன கலப்பையைக் கயிற்றைக் கட்டி சரி செய்கிறான்.பசுவிற்குக் கூரையிலிருந்து மக்கிப்போன வைக்கோலைப் பிடுங்கி தீனியாகக் கொடுக்கிறான் இதுதான் விவசாயிகள் சிக்கனமாக வாழும் வட்சனம்-லெனின் ரூ.40/-

கற்பனவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்

ஃபிரடெரிக் எங்கெல்ஸ் மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்திலேயே பல மொழிபெயர்ப்புகள் பல பதிப்புகள் பல்லாயிரம் பிரதிகள் கண்ட நூல். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சோசலிசம் என்ற பெயரில் பல குழப்பமான தத்துவங்கள் வலம் வந்தபோது மார்க்சும் எங்கெல்சும் பிரதிநிதித்தும் செய்த விஞ்ஞான சோசலிச கருத்துகளை விளக்கி எங்கெல்ஸ் எழுதி முதன் முறையாக பிரெஞ்சு மொழில்1880ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ரூ.70/-

விழி திறந்தது வழி பிறந்தது

தா பாண்டியன் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட1970காலகட்டத்தில் நடந்த உலக,இந்திய,தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா.பண்டியன் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன?எந்தக் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தன?என்பவற்றை மிகத் தெளிவாக இந்த நூலில் அறிய முடிகிறது.இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலச் சூழலையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் இந்தக் கட்டுரைகளின் மகத்துவம் புரியும் ரூ.120/-

சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லையேல் சுதந்திரம் இல்லை

சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி 46ஆவது பிரிவிற்குச் செல்லுங்கள்,அது,தலித்துகள்,பழங்குடியினர் மற்றும் இதர நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ரூ.10/-

டெங் ஷியோ பிங் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்

மிலிட்டரி பொன்னுசாமி சுமார் 70 ஆண்டுகள் அந்தப் பெரும் நாட்டின் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், மகத்தான சீனப் புரட்சியின் தளகர்த்தர்களில் ஒருவருமான டெங் ஷியோ பிங் அவர்களின் கருத்துகள், ஏற்பு – ஏற்பின்மைக்கு அப்பாற்பட்டுத் தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் கொண்டவை. அந்த வகையில் இன்றைய சீனத்தைப் புரிந்துகொள்ள, அதன் மகத்தான புதல்வர்களில் ஒருவரான டெங் ஷியோ பிங் அவர்களின் சிந்தனையை அவரது எழுத்துகள் மூலமே அறிந்துகொள்ள அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்டுரைகள் உதவும். ரூ.220/-

செய்தியின் அரசியல்

ஆர். விஜய்சங்கர் முதலில் சன் டி.வி. பாருங்கள்; பின் ஜெயா டி.வி. பாருங்கள்;பின் கலைஞர் டி.வி. பாருங்கள்;நேரமிருந்தால் மக்கள் தொலைக்காட்சி பாருங்கள். இவை அனைத்தும் கொடுக்கும் செய்திகளின் சராசரியை வைத்து உண்மை செய்தியை ஊகித்துக் கொள்ளுங்கள். ரூ.10/-

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

அ. மார்க்ஸ் 90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம்.இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக்கூர்மையாக அவதானித்துப் பதிவுசெயது வந்திருக்கிறார்.ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த,அரசியல்,பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.வகுப்புவாத அரசியலுக்கு எதிரான மாபெரும் ஆவணமாகத் திகழும் இந்நூல் மதச்சார்பின்மை,சிறுபான்மையினர் பாதுகாப்பு,பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போரட்டம் எனப் பல தளங்களிலும் விரிந்து,நம் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல தவறான எண்ணங்களையும் பொய்களையும் அழுத்தமாக எதிர்த்துப் போராடுகிறது.புனைவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடிச் செல்கிறது. ரூ.400/-

நாடு படும் பாடு

ஆர் நடராஜன் இரு மொழி எழுத்தாளர் டாக்டர் ஆர்.நடராஜன் கல்லூரி முதல்வராக,ஆங்கிலப் பேராசிரியராக இந்து நாளிதழின் உதவி ஆசிரியராக,அமெரிக்கத் தூதரக அரசியல் அலோசகராகப் பணியாற்றியவர்.நிர்வாகவியல் மற்றும் பொருளியல் நூல்களுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளைப் பெற்றவர்.ஆங்கிலத்தலும் தமிழிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் சில நூல்களையும் பல கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.சிறந்த மொழிபெயர்ப்பாளர்,சிறந்த ஆங்கில நூலாசிரியர்,சிறந்த தமிழ் நூலாசிரியர்,சிறந்த ஆங்கிலப் பத்திரிகையாளர்,சிறந்த தமிழ்ப் பத்திரிகையாளர் என்ற விருதுகைளைப் பெற்றுள்ள இவர் சாகித்ய அகடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்துள்ளார்.தமிழ் நாட்டின் தலைசிறந்த அரசியல் விமர்சகர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரிய இவர் எதையும் தெளிவாக,துணிவாக எழுதுபவர்.வாசகர்களுக்கு மட்டுமே கடமைப்பட்டவன் என்ற கொள்கையுடன் இவர் எழுதியுள்ள அரசியல்,சமுதாய,பொருளாதாரக் கட்டுரைகள் சமகால வரலாற்று ஆவணங்கள்.அப்படிப்பட்ட51கட்டுரைகளின் தொகுப்பே நாடு படும் பாடு என்ற இந்த நூல். ரூ.170/-