படைப்பாளிகள் உலகம்

ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒருசேர இப்போது படித்தபோது எனக்கு அவை என் கதைகள் இவ்வளவு ஆண்டுகள் சொல்லி வரும் செய்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்வதாகத் தோன்றியது. இக்கட்டுரைகளை எழுத நேர்ந்தபொழுது ஒரு சில எனக்கு நிர்ப்பந்தமாகக் கூடத் தோன்றியிருக்கின்றன. ஆனால் எழுதி முடித்தபின் இவை அனைத்தும் என் சிந்தனைக்கும் கவனத்திற்கும் நிறைய ஊக்கம் தந்திருக்கின்றன. ஒரு நல்ல கதை எழுதி முடிப்பதில் விளையும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் மனநிறைவுக்கும் இது சற்றும் குறைந்ததல்ல. – அசோகமித்திரன் ரூ.190/-

சொல்முகம்

என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்-போவதென்ன என்பது முன்னரே தெளிவாகி-விடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்–கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். ரூ.170/-

நாளும் பொழுதும்

நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்து-கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்-களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மை-யான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித் தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் வாசகன் எளிதில் தொட்டறியக் கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத் தருணங்கள் அளவுக்கு இந்த அனுபவத் தருணங்களும் கலைத்-தன்மையை அடைவது இப்படித்தான். ரூ.120/-

மலாலா – ஓர் அறிமுகம்

துப்பாக்கி ஏந்திய தாலிபான்களுடன் பேனா ஏந்திப் போராடியவர் மலாலா. துப்பாக்கியால் துளைக்கப்பட்டும் மனம் தளராமல் பெண் கல்விக்காகப் போராடியதால் 17 வயதில் ‘அமைதிக்கான நோபல் பரிசை’ப் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட வீரப் பெண்ணின் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வது நமக்கு அவசியமாகிறது. அந்த நோக்கத்தில் உருவானதே இந்த நூல். – பிரியா பாலு ரூ.60/-

மகாபாரதம்

சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. – பிரபஞ்சன் ரூ.300/-

நாடற்றவன்

2012இல் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஓடினார். அவரை எப்படி மறக்கமுடியும்? அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே பார்த்தேன். அவர்தான் என்னுடைய வீரர். – அ. முத்துலிங்கம் ரூ.225/-

தேநீர் மேசை

இக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்த மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற்றி அறிந்துகொள்ளாதது நம் பெற்றோர் குறித்தும் மூதாதையர் குறித்தும் அறிந்துகொள்ளாததைப் போன்றது என்பேன். இக்கட்டுரைகளைப் படிக்கிறவர்களுக்கு அவரவரது சொந்த ஊரைப் பற்றிய ஞாபகங்கள் உயிர்பெற்றால், அதுவே என் மகிழ்ச்சி. – அழகிய பெரியவன் ரூ.70/-

சில இயக்குநர்கள் – சில திரைப்படங்கள்

இலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதவும் ஆசை. – வண்ணநிலவன் ரூ.65/-

குறுக்குவெட்டுகள்

‘குறுக்குவெட்டுகள்’ இயல் இசை நாடகம், ஆடிய ஆட்டமென்ன, சில நூல்கள் என மூன்று பகுதிகள் கொண்டவை. எல்லாமே வாழ்க்கை  பற்றியவை. – அசோகமித்திரன் ரூ.150/-

கதை மழை

பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் கதைமழை. – பிரபஞ்சன் ரூ.80/-