ரெட் சன்

ஆசிரியர்: இந்திரா காந்தி ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்கள் அலுவலகத்திற்குள் நுழையு முன்பு… கட்டாயம் படித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம், அதிகார வர்க்க அதிகாரிகளும், சமூகவியலாளர்களும் கற்க வேண்டிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் புத்தகத்தை கருத வேண்டுடிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் பத்தகத்தைக் கருத வேண்டும் எனடபதைச் சொல்லவேண்டியதில்லை. -தி ஹிந்து ரெட்சன் – இந்தியா, தன் நாட்டு மக்களுடனேயே ஈடுபட்டுள்ள போரைப் பற்றிய ஒரு வருந்தந் தோய்ந்த கதையயைக் கூறுகிறது மாவோயிஸ்டுகளும், அரசும் நேருக்கு நேர் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவில் பரந்த கிராமப் பகுதிகளில் மறைந்திருக்கும். எந்நேரத்திலும் பெரிதாக வெடிக்கக் கூடிய சூழ்நிலையை மிகத் துல்லியமான வரங்களுடன் விளக்கியுள்ளது இந்நூல். ரூ.250/-

முள்கிரீடம்

ஆசிரியர்: மு.ந.புகழேந்தி ஏ கலக்டரே ஏ அரசாங்கமே ஏ தாசில்தாரே இந்த நிலத்தையும் இந்த வனங்களையும் பூமிக்கு கீழே இருக்கும் இந்த பொக்கிசங்களையும் நீதான் எங்களுக்கு கொடுத்தாயா? இயற்கையிடமிருந்து கிடைத்த , இந்த பரிசை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகிறோம். தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙகளுடைய சொத்து நீ யார் இதை எங்களிடமிருந்து பிடுங்க? நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை அன்னை பூமியைக் காக்க போராடுவோம்… –ஆலியா மாஜ்ஹி, பெண் போராளி, ஒரிசா ரூ.150/-

முள்கிரீடம்

ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள்: ஒரு கள ஆய்வு அ. பகத்சிங் இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது. ரூ.100/-

பாலஸ்தீன்

எட்வர்ட் செய்த் தமிழில்: எஸ். அர்ஷியா ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குபடுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் போக்கில், நிதானித்த முறையில், அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர். தற்கொலைப்படை என்பது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் அது, குறைகூற முடியாத அளவுக்கு நேரடியானதாக இருக்கின்றது. பல்லாண்டுகளாக, நெறியற்ற வழியில் நடத்தப்படுவதாலும், அதிகாரமின்மையாலும், நம்பிக்கையிழப்பின் மனக்கசப்பான முடிவினாலும், உளப்பூர்வமான வகையில் உருப்பெற்றத் திட்டமாக அது இருக்கின்றது என்பது, எனது கருத்து. ரூ.60

சிறிய​தே அழகு​

ஆசிரியர்தமிழில் :யூசுப்ராசா இரண்டாம் உலகப்போருக்கப் பின் வெளிவந்த சிறந்த பொருளாதார நிபுனர்களிடம் செல்வாக்குப் செலுத்திய 100 நூல்களில் ஒன்றென டைம்ஸ் பத்திரிக்கையால் கொணடாடப்பட்ட ஐரோப்பாவின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான Prix europeen de lissal Charles Vellon விருதை வென்ற ஆங்கில பொருளாதார நிபுனரின் சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல், மனிதனுக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவனது குறைபாடுகள் என்ன? அவற்றைச் சரி செய்ய வேண்டியதன் தேவை என்ன? அவற்றை எப்படி செய்வது? முழு உலகிற்குமான நற்பலன் கிடைக்க எந்த வகையான தொழிற் செயல்பாடுகள் சரியானவை? அளவில் சிறிய மனிதனுக்கு சிறியவைகளே அழகானவை, உள்ளதே போதும் என்ற மனநிலை எவ்வளவு நன்மையானது? தனி உடைமைத்துவம், மனித இனத்தை எப்படிச் சுரண்டி சீரழிக்கிறது? அனைத்தும் பொதுவதவதால் விளையும் நன்மைகள் மனித குலத்தை எந்த அளவுக்கு வாழ்விக்கும? எல்லாவற்றுக்கும் விடைதேடி அலசி ஆராய்கிறார் பேரா.இ.எப். சுமாஸர் ரூ.180

சாதி அரசியல் அதிகாரம்

கௌதம சித்தார்த்தன் தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல். ரூ.100/-

சச்சார் குழு அறிக்​கை

ஆசிரியர்: அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு முறை சேகரித்துள்ள முக்கியப் பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள். அட்டவனைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல். ரூ.70/-

குர்து தேசிய இனப் போராட்டம்

எச். பீர்முஹம்மது குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த நூல். ரூ.200/-

காந்தியை கொன்றவர்கள்

மனோகர் மல்கோங்கர் தமிழில் : க.பூர்ணசந்திரன் நாதுராம் விநாயக் கோட்ஸே, 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர். அதனால் அவர் மூக்குப் பொட்டு (நாது£, தமிழில் நத்து) அணிந்து வளர்ந்தார். ஆகவே நாதுராம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அக்கம்பக்கத்தவர்க்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். ரூ.300/-

கருத்து சுதந்திரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவதில்லை . இதற்குப் பின்னால் உள்ளநுண்ணரசியல் செயல்பாடுகள்தான் கலை, அழகியல் என்கிறபெயர்களிலும் தீவிரமான, தரமான, சிறந்த எழுத்து என்கிறபெயர்களிலும் விருதுகளாக வழங்கப்படுகின்றன. ரூ.130