இந்தியா எதை நோக்கி?

ராமச்சந்திர குஹா/லீனாகீதா ரெகுநாத்/தினேஷ் நாராயணன் /வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்  தொகுப்பும் மொழியாக்கமும் :  செ.நடேசன் சங்பரிவாரங்களின் சகிப்பின்மை   நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர். இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல்  ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம். ரூ.150

ஆயுத வியாபாரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் “நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா?ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்டமிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்றவை இவ்வாயுதங்கள். இதுவெல்லாம் யாருக்கு? ரூ.90

26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்

ஆசிரியர்: இந்திரா காந்தி 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத்திருந்து, 1993 தொடர் குண்டு வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்தியா… ரூ.65/-

கலகம் காதல் இசை

சாரு நிவேதிதா உலக இசைப் பரப்பின் சில மகத்தான வடிவங்களையும் கலைஞர்களையும் பற்றி விவாதிக்கும் இந்நூல் மலையாளத்தில் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தைப் பெற்றது. இவை இசையின் பரவசத்தையோ கலைஞர்களின் மகோன்னதத்தையோ பாடும் நூல் அல்ல. மாறாக அந்தந்தச் சமூக, பண்பாட்டு, அரசியல் வெளிகளில் இந்தக் கலைஞர்கள் ஏற்படுத்திய குறுக்கீட்டினையும் அதன் ஊடாக அந்தச் சமூகங்களின் உளவியல் மற்றும் அரசியல் பண்பாட்டினையும் முன்வைக்கிறது.

அறியப்படாத தமிழகம்

தொ.பரமசிவன். தொ.பரமசிவன். தமிழ் சமூகச் சூழலை வரலாற்றுப் பின்னணியுடன் ஆராய்ந்து சொல்லும் மிகச் சில ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ் தேசியம், திராவிட ஆய்வுகளில் இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் அசாதாரணமானவை. இயல் விருது பெற்றவர். ரூ.120/-  

பண்பாட்டு அசைவுகள்

தொ.பரமசிவன். தமிழ் சமூகச் சூழலை வரலாற்றுப் பின்னணியுடன் ஆராய்ந்து சொல்லும் மிகச் சில ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ் தேசியம், திராவிட ஆய்வுகளில் இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் அசாதாரணமானவை. இயல் விருது பெற்றவர்.   ரூ. 200/-

அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே

எம்.ஜி.சுரேஷ் எழுதிய இந்த சிறிய நூல் மேற்கத்திய தத்துவப் போக்கின் சுருக்க்மான வரலாறு. சாக்ரடீஸ் காலம் முதல் தெரிதா காலம் வரை அலசும் அற்புத நூல். பின்நவீனத்துவத்தைப் பின் பற்றி பல நூல்கள் எழுதியவர். ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ (1999), ‘அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), ‘சிலந்தி’ (2001), ‘யுரேகா என்றொரு நகரம்'(2002), ’37′(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ (2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ரூ.70/-

நக்சல்பாரி முன்பும் பின்பும்

 சுனிதிகுமார் கோஷ் ரூ.350.00 இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது

வனம் எழுதும் வரலாறு

சத்நாம் தமிழில்: பிரசன்னா பஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இந்நூல் விவரிக்கின்றது. ரூ.130/-

பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்க்கின்ஸ் தமிழில்:  போப்பு “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது. ரூ.200/-