குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை

கீரனுர் ஜாகிர் ராஜா கீரனூர் ஜாகிர் ராஜாவின் இக்கட்டுரைத்தொகுப்பு நான் எதிர்பாராத அவருடைய ஒரு முகத்தைக் காட்டி என்னை மகிழ்விக்கிறது.தொகுப்பில் உள்ள17கட்டுரைகளில் அவர்30க்கு மேற்பட்ட படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் நுட்பமான உளப்பூர்வமான வரிகளை எழுதியிருக்கிறார்.தஞ்சை பெரியகோவில் பற்றிய கட்டுரை மிகச்சிறப்பான மொழிநடையில் சரியான கோணத்தில் எழுதப்பட்ட ஓர் ஆபுர்வமான கட்டுரை என்பேன்.க.நா.சு பற்றிய கட்டுரை உண்மையில் அவருடைய பிறந்த நூற்றாண்டில் அவருக்குச் செய்யப்பட்ட கெளரவமான அஞ்சலி என்றே பார்க்கிறேன்.வைக்கம் முகமது பசீர் பற்றிய கட்டுரை ரொம்ப அழகாக எழுதப்பட்டுள்ள பசீர்க்கு மரியாதை செய்யச் சரியான மொழியில் எழுதப்பட்டுள்ள கட்டுரை.கீரனூர் ஜாகிர் ராஜாவின் இக்கட்டுரையின் பல வரிகள் மனசீலிருந்து வந்தவை போல அமைந்துவிட்டன.கட்டுரை இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இத்தொகுப்பை வரவேற்போம். ரூ.90/-

Early Studies in Tamil Prosody The evolution of Tamil Viruttams

E.N. Thanikachala Mudaliar Viruttam has been the most popular Tamil prosodic form from the days of silappathikaram. This volume draws the attention of the Tamil scholarly world to the pioneering studies of E.N. Thanikachala Mudaliar on viruttam. Consisiting of two studies, the first is a lecture titiled ‘The Evolution of Tamil Viruttams’ delivered in 1991-probably the first lecture on Tamil prosody ever to be delivered before a learned audience – and serialized in 1913-14 in Siddhanta Dipika. Twenty-five years later, in 1938,he rewrote it afresh recalling his earlier study. ரூ.90/-

சங்க இலக்கியக் காட்சிகள்(மார்கசிய வெளிச்சத்தில்)

வெ.பெருமாள்சாமி வெ.பெருமாள்சாமியின் சங்க இலக்கியக் காட்சிகள் நூல் அண்மைகாலத்தில்வெளிவந்துள்ள சங்க இலக்கியம் பற்றிய நூல்களில் முக்கியமானதும் தரமானதும் ஆகும்.இந்நூல் சங்க இலக்கியம் பற்றிய புதிய பாதைகளைத் திறந்து வைத்துள்ளது.இந்நூலைப் படித்தப்பின்னர் உரையாசிரியர்களின் உரையைக்கூட புதிய பார்வையுடன் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் புரிகிறது.சொல்லவரும் செய்தியை தக்க ஆதாரங்களுடன் சொல்வதற்கேற்ற புலமையும் தெளிவும் இருப்பதால் சொல்லும் கருத்திலும் தெளிவு இருக்கிறது.பேரா.பத்மாவதி விவேகானந்தன் ரூ.110/-

சங்ககாலச் சமுதாயம்

கே முத்தையா சங்க இலக்கியங்கள் தரும் காட்சி வர்க்கபேதமற்ற வறுமையற்ற பொற்காலம் என்று நினைப்பது தவறு.அது நிலவுடமை மன்னராட்சியின் காலம்.அதில் ஆதிக்கம் புரிந்தவர்கள் மன்னர்கள்,நிலக்கிழார்கள்.உழைப்போர் அவர்களுக்குக் கீழ் உரிமையற்றிருந்தனர்.பிற நாடுகளைத் தாக்கி அழித்துச் சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட அடிமைகள் என்ற பாகுபாட்டுடன் இருந்த காலம் அது ரூ.20/-

சங்க இலக்கியப் பதிப்புரைகள்

இரா ஜானகி நூலாசிரியர் உரையாசிரியர் போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னுமொன்று கூட்டி,இவர்தொழில் முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக்கடியதென்றும் அவர் அறிவுமுழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன்.தூக்கினாலன்றோ தெரியுத் தலைச்சுமை?பரிசோதனாசிரியர் படுங் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச்சாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க்கன்றி விளங்காது.இவையெல்லாம் அனுபவத்தாலன்றி அறியப்படாப் பொருள்கள்.ஒன்றற்கொன்று ஒவ்வாத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத் வே.சாமிநாதையரைக் கேட்டால் இந்நல்வகையாசிரியர் பாட்டின் தாரதம்மியம் சற்றே தெரியலாம்.எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி ரூ.110/-

வேதங்களின் நாடு

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மார்க்சியப் பார்வையில் இந்தியாவின் சமூக கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கிறது.இந்தியச் சமூகத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்கிறது.நீண்ட நெடுங்கால இந்தியச் சமுதாய வளர்ச்சியினையும் மாறுதல்களையும் மேலும் ஆரியர்கள் வருகைக்கு முன்னாலேயே அவர்களை காட்டிலும் உயர்வான கலாச்சார வளர்ச்சி பெற்றிருந்தவர்களாக இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் இருந்தனர் என்பதையும் இம்.எம்.எஸ்.எடுத்துக் காட்டியுள்ளார். ரூ.40/-

தமிழ் நிலமும் இனமும்?

இலா.வின்சென்ட் இன்று தொல்லியனும் மானிடவியலும் வளர்ச்சியுற்ற நிலையில்,தமிழர்தம் பண்டைய வரலாறு குறித்த புதிய தரவுகள் கிட்டியுள்ளன.இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழரின் பண்டைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி தொடங்கியுள்ளது.அதன் ஓரங்கமாக திரு.இலா.வின்சென்ட் அவர்களின் இந்நூலும் உருப்பெற்றுள்ளார்.ஒவ்வொரு இயலில் இறுதியிலும் அதன் பொழிவாக செய்திகளைத் தொகுத்தளித்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது.உணர்ச்சி சாராது,தாம் படித்த,தாம் நம்பும் தரவுகளின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியுள்ளார்.அவரது கருத்துக்களுடன் மாறுபாடு கொள்வோரும் இவ்வுண்மையை ஏற்பர் என்றே நம்புகிறேன். நூலைப் படிப்போம்.சிந்திப்போம்.விவாதிப்போம்.ஆ.சிவசுப்பிரமணியன்,தூத்துக்குடி.இலா.வின்செட் அவர்களின் தமிழ் நிலமும் இனமும்,பல நூற்றாண்டு கால நம்பிக்கைகளின் மீது,மறுபார்வை வேண்டுகிறது.எவரையும்,எந்தக் கோட்பாட்டையும் வெல்லும் பூடகம் அவர்க்கு இல்லை.அவர் இங்கே யுத்தக்கருவியோடு நிற்கவில்லை.உடல் தெரியும் கந்தலோடும் முகம் முழுகக் கண்ணீரோடும் உள்ள அபலையைப் போல ஆயிரம் அய்யங்களைக் கையிலேந்தி நிற்கிறார்.இவற்றைப் புறக்கணிப்பது அறிவுடைமை ஆகாது.தமிழ் கூறும் நல்லுலக அறிஞர்களின் கடமை,இந்நூல் எழுப்பும் அய்யங்களுக்கு விடை இறுப்பதே.கவிஞர் தமிழ்நாடன் சேலம் ரூ.100/-

பட்டது யானை

வேல ராமமூர்த்தி பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம்.பெற்றோர் வேலுச்சாமித் தேவர் லக்ஷமி அம்மாள்.கல்லூரிப் படிப்போடு ராணுவத்துக்குப் போனவர்.துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறி வைத்தவர்.பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர்.மண் சார்ந்த,வல்லமைமிக்க,தனித்த ஓர் எழுத்து பாணியை தனதாக்கிய வேல ராமமூர்த்தி,பல்லாயிரம் பேரையும் இமைக்க மறந்து கேட்க வைக்கும் மேடைக் கதைசொல்லி பல்கலைகழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞசியமாகவும் ஆன இவரது கதைகள்,அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம்,ஃபிரெஞ்ச்,மலாய்,கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை,கட்டுடைத்து வெளியேறி,மதயானையாக…கொம்பனாக தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கி உள்ளது. ரூ.300/-

வால்காவிலிருந்து கங்கை வரை

ராகுல சாங்கிருத்தியாயன் தமிழ் மக்களின் அறிவுச் சொத்து கிமு.6000முதல்20ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரிகம்- 20கதைகளாக36மொழிகள் தெரிந்து150புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா(INA)வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கன.முத்தையா தாமே,சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது. ரூ.350/-