கண்ணகி

சு.தமிழ்ச்செல்வி பெண்ணின் பெரும் துயரம் என்பது சு.தமிழ்ச்செல்வியினுடைய புனைவில் ஒரு வெளி. அவரே இத்துயருக்கான மாற்று வெளியை தமது புனைவின் வழி உருவாக்கிக் கொள்கிறார். இச்சமூகத்தில் இருந்தும் அவரது கற்பனை மற்றும் விழைவுகளிலிருந்தும் உருவாக்கப்படும் இவ்வெளி புதிய இல்லற அறங்களையும் பெண்ணிய நெடிகளையும் உள்ளீடாகக் கொண்டு இயங்குபவை. தமிழ் பண்பாட்டு கட்டுமானத்திற்கு பெரிதும் உதவியவள் சிலப்பதிகார பெருங்கதையாடல் உருவாக்கிய கண்ணகி. இப்பண்பாட்டு உருவாக்கத்தில் அசைவை ஏற்படுத்தும் மாற்று வாசிப்பை சாத்தியப் படுத்துகிறாள் இப்புனைவில் செயல்படும் நவீன கண்ணகி. ரூ.120/-

வட்டத்துள்

வத்ஸலா வத்ஸலாவின் நாவல் வெறும் அம்மா-மகள் கதை மட்டுமல்ல. ஏராளமான இதர பாத்திரங்கள் ஆசிரியையுடைய அகன்ற சொல்லோவியத்தில் அவரவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள். பொதுவாக சுயநலம் என்ற குணம் இந்த நாவலின் பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் வரும் சொற்களும் சிந்தனைகளும் இறுதியிலும் வந்து வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன.(அசோகமித்திரன் முன்னுரையிலிருந்து) ரூ.175/-

ஆஸ்பத்திரி

  சுதேசமித்திரன் நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து) ரூ.80/-

மேகமூட்டம்

நிஜந்தன் எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்ட புனைவாக மாற்றுகிறது. ரூ.90/-

கானல் நதி

யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப சொல்லப்படும் இழந்த காதலின் தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின் மன முறிவுகளின் யாரும்இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்நாவல். ரூ.200/-

உறுபசி

எஸ். ராமகிருஷ்ணன் நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது. ரூ.110/-

ரத்தம் ஒரே நிறம்

சுஜாதா சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்.’ இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல். ரூ.260/-  

வஸந்த் வஸந்த்

சுஜாதா சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று. ரூ.140/-

வண்ணத்துப் பூச்சி வேட்டை

சுஜாதா உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதைச் சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை. ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும் பயங்களையும் அவர்கள் மேல் செலுத்தப்படும் வெளிப்படையான, மானசீக வன்முறையையும் சுஜாதா மனநெகிழ்ச்சியூட்டும் வகையில் இந்நாவலில் விவரிக்கிறார். மிக நுட்பமான சித்தரிப்புகளும் அவதானிப்புகளும் இந்நாவலை மிகவும் அழகியல் தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. ரூ.115/-

பேசும் பொம்மைகள்

சுஜாதா இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் ‘செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்’. ரூ.180/-