கதவடைப்பு

சிவகாமி நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். சுகுமாரன் ரூ.80/-

காற்றால் நடந்தேன்

சீனு ராமசாமி நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். சுகுமாரன் ரூ.80/-

மஞ்சணத்தி

தமிழச்சி தங்கபாண்டியன் நகுலனின் ‘சுசீலா’ போலவும், கலாப்ரியாவின் ‘சசி’ போலவும், தமிழச்சியின் ‘வனப்பேச்சி’ பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, அதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்….. ‘மஞ்சணத்தி மரம்’ போன்ற கவிதைகளில் வரும் ஆற்றல், ஒரு அரூவமான மொழிச்சக்தியாகும். தமிழச்சி ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியாவில் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், ஆங்கிலத் துறையினர் மூலம்தான் ‘மாடர்னிசம்’ அவர்கள் அவர்கள் மொழிகளில் நுழைந்தன. தமிழச்சி கவிதைகள் நேர்மாறாக மாடர்னிசத்தைத் தாண்டி நிற்கின்றன….. தமிழச்சி, தமிழ்க்கவிதை குவலயமயமாகும் தருணத்தில், பிராந்தியத்திலிருந்து ஒரு வனப்பேச்சி உருவாக்கிக்கொண்டு வருகிறார். இதுவும் பின் நவீனத்துவத்தின் கிழக்கத்திய போக்குத்தான். வனப்பேச்சியின் கதகதப்பில் பாவாடை மண்ணில் புரள இளவரசி போல் கிராமத்தில் வாழ்ந்த ஒரு குட்டிப் பெண் நகரைச் சரணடைந்து, தாயாகி, நகரின் வெறுமையும், நாடு கடந்து தமிழ்ச்சாதி சந்திக்கும் சிறுமையும் கண்டு, தன் ஆதிக் கொள்கைகளைக் கைவிடாமல் நம்பிக்கையுடன் கவிதையில் இயங்கிக்கொண்டிருக்கிற தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் மென்மேலும் மெருகேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூ.190/-

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்

அய்யப்ப மாதவன் தீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்சுமத்தின் சவால்களை இக்கவிதைகள் வலிமையுடன் எதிர்கொள்கின்றன ரூ.80/-

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும் இக்கவிதைகளெங்கும் ததும்புகின்றன. இந்த வாழ்க்கையில் அன்பைப் போல தண்டிக்கப்படுகிற, நிராகரிக்கப்படுகிற, வஞ்சிக்கப்படுகிற உணர்ச்சி வேறேதும் இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் மனுஷ்ய புத்திரன் தனது கவிதைகளில் திரும்பத் திரும்ப சந்திக்கிறார். ரூ.190/-

அதீதத்தின் ருசி

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பாசாங்குகளை விலக்கி துரோகம் செய்கிறது. சாத்தானோடும் கடவுளோடும் சச்சரவிடுகிறது. சொற்களையும் நம் மனங்களையும் தொடர்ந்து கலைத்து அடுக்குவதன் மூலம் பெரும் அமைதியின்மையை உருவாக்குகிறது. மனுஷ்ய புத்திரனால் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் அவரது படைப்பு நிலையின் உச்சங்களைத் தொட்ட பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன ரூ.150/-

நான் நீ மீன்

கலாப்ரியா நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக்காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும் தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவிதை மொழியினைத் தொடர்ந்து புதிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதன் வழியே ஒரு புதிய வாசிப்பனுபவத்தை இத்தொகுப்பில் கலாப்ரியா உருவாக்குகிறார். ரூ.50/-

அருந்தப்படாத கோப்பை

மனுஷ்ய புத்திரன் உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீர் இல்லை. நீங்கள் ஒரு உலர்ந்த இலையைப் போல காற்றில் மிதந்து செல்கிறீர்கள். இந்தக் கவிதைகள் எவ்வாறு வாழ்வின் கிளைகளோடும் மலர்களோடும் தன்னை விடுவித்துக்கொண்டன என்பதன் சாட்சியம்தான் இந்தத் தொகுப்பு. உடைந்த நிலவாகவோ உதிர்ந்த நிலவாகவோ தன்னை உருவகித்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு சந்தோஷமான விவகாரம் அல்ல. ஆனால் ஒரு கவிஞனுக்கு அந்த துக்கம் தரும் இதமும் பரிவும் அவ்வளவு தேவையாக இருக்கிறது. ரூ.80/-

இரண்டு சூரியன்

தேவதச்சன் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவ சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின்மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும் கண்ணகியும் ஆண்டாளும் அவரது கவிதைக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துருவங்களைக் கலைந்து பிரவேசிக்கிறார்கள். – எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.40/-

நீருக்குக் கதவுகள் இல்லை

சுகுமாரன் ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழுதிச் செல்கின்றன. அவர் நம் அந்தரங்கத்திற்கு எவ்வளவு அருகில் வரமுடியுமோ வந்து உரையாடலின் மகத்துவம் மிக்க தருணங்களைத் திறககிறார். ரூ.70/-