பசித்த பொழுது

மனுஷ்ய புத்திரன் இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ரத்த சிந்தினீர்கள் இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள் இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள் இதைத்தவிர வேறெதையும் பேசவில்லை இந்தக் கவிதைகள். இந்த தொகுப்பில் உள்ள 236 கவிதைகளில் 235 கவிதைகள் 2011ல் ஒன்பதே மாதங்களில் எழுதப்பட்டவை ரூ.350/-

அந்நிய நிலத்தின் பெண்

மனுஷ்ய புத்திரன் காமத்தின் புதிர்ப் பாதைகள் காலத்தின் கொடுங்கனவுகள் கனிதலின் தீராத தத்தளிப்புகள் 512 பக்கங்களில் ஒரு நவகாவியம் ரூ.480/-

மஜீத் கவிதைகள்

மஜித் முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத்தொடங்கிவிட்டன. ரூ.150/-

பொருளற்ற ​சொற்கள்

ஆசிரியர்: ராஜ்குமார் ஸ்தபதி மண் மக்கள் மொழி மானம் மயிறு எல்லாம் இழந்து சொரனையற்று தோல் தடித்து இனாம் இலவசத்திற்காக உங்களுக்கு முன் வரிசையில் நிற்கையில் எழுதிய கவிதைகள் ரூ.50/-

நெடுஞசா​​லை​யைக் கடக்கும் நத்​தை

ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி எநதப்பயணத்திலும் உடன் வருவதல்லை என்வீட்டுமரம் சாலையோர மரங்களை துணைக்கு அனுப்புகிறது தன்னை நினைவூட்ட… ரூ.40/-

தம்மபதம்

யாழன் ஆதி தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். ரூ.130/-

மிட்டாய்க் கடிகாரம்

முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை… குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது. வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெற்றுச் சலனங்கள்… இவையே நினைவில் கவிதையாகப் பதிந்து கிளைத்து அசைகின்றன. நானே அறியாத கணத்தில் என்னிடம் வரும் கவிதை சில சமயம் என் வசப்படுகிறது. சில சமயம் அது நழுவி, நகர்ந்து தென்படாத நிறக்குமிழ்களாகி விடுகிறது. மாயக் குமிழ்களின் பின் அலைபவளாக இருப்பது அலுக்கவேயில்லை. – உமா மகேஸ்வரி ரூ.100/-