ஒருநாள்

க.நா.சுப்ரமணியன் நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்-திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறை-யைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணு-வார்கள் என்று நம்புகிறேன். ரூ.140/-

ரெயினீஸ் ஐயர் தெரு

வண்ணநிலவன் இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் அவ் வீடுகளில் வசிக்கும் ஜீவன்கள் பற்றிய எளிய கோட்டுச் சித்திரமே இந்நாவல். ஆனால் அதில் உள்ளுறைந்-திருக்கும் உலகம் அடர்த்தியானது. வண்ண-நிலவனின் கசிந்துருகும் மொழிநடையில் இத்-தெருவின் பிடிபடா வினோதங்கள் மாயமாய் புலப்படுகின்றன. ரூ.70/-

கம்பா நதி

நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். வண்ணநிலவன் ரூ.90/-

பெருமழை நாட்கள்

பெரும் மழை நாட்கள் நாவலில் என்ன சொல்லப் பட்டி-ருக்கிறது, என்ன சொல்லப்படுவது மாதிரி சொல்லப் படாமல் விட்டிருக்கிறது என்பதெல்லாம் சொல்லவேண்டிய தில்லை. எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. – சா.கந்தசாமி ரூ.160/-

முதற்கனல்

ஜெயமோகன்  ரூ.290/- மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது.

ஏழாம் உலகம்

ஜெயமோகன் ஒரு கனவு வழியாக ராமப்பனின் முகம் என்னுள் மீண்டபோது எழுந்த உத்வேகம் இந்நாவலை எழுத வைத்தது. இது ஒருவகை விடுதலை முயற்சி. என்னை அச்சுறுத்தி அருவருப்பூட்டிய ஓர் உலகு. இதன்மூலம் நானும் வாழும் உலகமாக ஆகிறது. ரூ.

நீலம் (பேப்பர் பேக்)

ஜெயமோகன்   நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை. ரூ.250/–

மானுடம் வெல்லும்

அரசர்களின் வாழ்க்கையை எழுதுவதே வரலாற்று நாவல் என்ற போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்து சாதாரண குடிமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறிய வணிகர்கள், அரசு அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தாசிகள் என்று அனைத்து மக்களையும் தழுவிய மக்கள் வரலாற்று நாவல் என்று விமர்சகர்கள் இந்-நாவலைக் குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சன் விலை ரூ.320/

பொய்த் தேவு

நான் அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக்-கொண்டு எழுதிய நாவல் பொய்த் தேவு. பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்-கிற இடத்தில், எல்லாவற்றையும் பொசுக்-கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக் கூடிய மனோ-பாவமும் இருக்கும் என்பது நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல, மனிதன் ஏற்றுக் கொள்கிற எல்லா லட்சியங்-களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பது-தான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை. – க.நா. சுப்ரமண்யம் ரூ.180/-

கடல்புரத்தில்

கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு. மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்பு வழி’ யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன். வண்ணநிலவன் ரூ.100/-