தவளைகள் குதிக்கும் வயிறு

வா.மு.கோமு தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பிவிட்டுத் தான் தொப்புள் சுருங்கியது. ரூ.230/-

செம்பருத்தி பூத்தவீடு

கீரனூர் ஜாகிர்ராஜா எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச் செம்பருத்திப் பூ நாலஞ்சு. ரூ.140/-

குன்னூத்தி நாயம்

ஹரிகிருஷ்ணன் ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் ரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, எழுத்தாளன் என்பதை விட கூத்துக்கலைஞன் என்று சொல்லி கொள்வதே மிக உவப்பாக இருக்கிறது என சொல்லிக் கொள்ளும் ஹரிகிருஷ்ணனின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ரூ.120/-

காஃபிர்களின் கதைகள்

கீரனூர் ஜாகிர் ராஜா இந்தியாவைப் போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இதைப் போல நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது. ரூ.160/-

கனவினைப் பின் தொடர்ந்து…

தா.வெ. பத்மா தமிழில் : ஜே. ஷாஜஹான் இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன். ரூ.100/-

எருது : உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

மொழியாக்கம் : கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாடுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள். ரூ.120/-

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

வா.மு. கோமு இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரூ.100/-

நாளைக்கும் வரும் கிளிகள்

ரூ.140/- பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது. இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை.

ஆடும் குதிரை

ரூ.140/- சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது.

பதினான்காவது அறை

ரூ.120/- அச்சங்களின் அழகைக் கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர் ஹிட்ச்காக் தான். மர்மத் திரைப்படம் எடுப்பது மட்டுமல்லாது அச்சம் தரும் திகில் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதையும் தன் கலைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் செய்தார். அவ்வாறு அவர் தேர்ந்தெடுத்த சிறந்த ஏழு துப்பறியும் கதைகளின் தமிழாக்கம்தான் இத்தொகுப்பு. ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த கதைகள் துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.