ஹாருகி முரகாமி

ஹாருகி முரகாமி தமிழில்:க.சுப்பிரமணியன் இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது. ரூ.350/-

நிழலற்ற பெருவெளி

தாஹர் பென் ஜீலோவ்ன் தமிழில் எஸ்.அர்ஷியா மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது. ரூ.200/-

நள்ளிரவின் குழந்தைகள்

சல்மான் ருஷ்தீ தமிழில்: பூர்ணச்சந்திரன்   1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் – இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் – பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது: அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணரஇயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாளிணிந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று. ரூ.550/-

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

சசி வாரியர் தமிழில் இர.முருகவேல் ஜனார்த்தனன் 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர். இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம். ரூ.220/-

தமுரு

பாப்லோ அறிவுக்குயில் இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது. ரூ.220/-

டாவின்சி கோட்

டான் பிரவுன் தமிழில் : பெரு முருகன் இரா.செந்தில் சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு. – பீப்பிள் மேகஸின் இது ஒரு  முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர். நெல்ஸன் டெமில் திரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. தி டென்வர் போஸ்ட் ரூ.499/-

ஜின்னாவின் டைரி

கீரனுர் ஜாகிர் ராஜா “ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை. ரூ.150/-

சோளகர் ​​தொட்டி

ஆசிரியர்: ச.பாலமுருகன் ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாமடுகளுடன் இணைத்துக்கொண்டவர். பி,யூ,சி,எல். அமைப்பில் செயல்படுபவர், வழக்குரைஞர் கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயககமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பண்பாடு, வாழ்க்கை, தொன்கங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள் பிணைப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். ரூ.150/-

சிதைவுகள்

சினுவ அச்சிபி தமிழில் : பேரா. ச. வின்சென்ட் 1958 இல் வெளிவந்த  Things Fall Apart (சிதைவுகள்)  சினுவ அச்சிபியுடைய முதல் நாவல்.  இது  உலகின் கவனத்தை ஈர்த்த முதல் ஆப்பிரிக்க நாவல்  என்றும் சொல்லலாம். எனவே தான் அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று  அழைக்கப்படுகிறார். எளிய  மக்களின்  கதை மொழி நேரடியாக தான் அமையும். எனவே தான் “சிதைவுகள்” மிக நேரடியாக  ஆக்கன்கோ என்னும் மல்யுத்த வீரனின் வாழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின் வழியே மீட்டெடுக்கிறது.. ரூ.150/-

சாயத்திரை

சுப்ரபாரதிமணியன் ISBN 97881927543-45 விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக் கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத – அல்ல, மறக்கக் கூடாத புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது. ரூ.195/-