படைவீடு

இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உண்டாக்கிய நெருக்கடியின் வலி இன்றும் தொடர்கிறது. விமர்சனக் களம் கொண்ட இந்த நாவலும் விமர்சனத்துக்குத் தப்பாது என்பது கண்கூடு. சமயம், சாதி தொடர்பான பல கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாகவும் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் தமிழ்மகன்.

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : சி. சீனிவாசன் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ரூ.550/-

நிழலற்ற பெருவெளி

தாஹர் பென் ஜீலோவ்ன் தமிழில் எஸ்.அர்ஷியா மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது. ரூ.200/-

தொலைந்துபோனவர்கள்

பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவிலும் நண்பர்களையே நினைத்துக்கொண்டிருக்க முடிகிறது. – சா.கந்தசாமி ரூ.150/-

வனவாசி

ஆசிரியர்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய வனம் எப்படி நகரமயமாகிறது என்பதை விவரிக்கும் மேற்கு வங்கக் கதை. நம் கண் முன்னாலேயே நமக்குத் தெரியாமல் காடு எப்படி காணாமல் போகிறது என்பதை மிக இயல்பாக விவரிக்கிறது. ரூ.170/-

உலக சினிமா வரலாறு – பாகம் – 2

உலக சினிமா வரலாறு, பாகம் II ஆசிரியர்- அஜயன் பாலா சினிமா விலை -260 1929 –முதல் 1972 வரை உல்க சினிமாவின் போக்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்,பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலிய சினிமாக்களின் புதிய அலை இயக்குனர்களால் சினிமாவுக்குள் உண்டான புதிய எழுச்சி . ஜான் போர்ட் , ஹிட்ச்காக், சத்யஜித்ரே, அகிராகுரசேவா, இங்மர்பெர்க்மன்,பெலினி, போன்ற உல்க சினிமாவை பாதித்த ஆளுமைகளின் வரலாறு அவர்கள் படங்கள் குறித்த ஆயுவுகளை உல்க வரலாற்றின் பின்புலத்துடன் அலசும் அரிய நூல்

உலக சினிமா வரலாறு – பாகம் 1

உலக சினிமா வரலாறு, பாகம் 1 ஆசிரியர்- அஜயன் பாலா/ சினிமா/ விலை -160 1895 முதல் 1929ல் வரையிலான மவுன சினிமாக்களின் வரலாற்றை சுவாரசியமாக கதை போல விவரிக்கும் இந்நூல் தொடர்ந்து கதை சொல்லும் சினிமா உருவான விதத்தையும், காட்சி மொழியின் ஆதாரமான் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் நமக்கு முழுவதுமாக பயிற்றுவிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிய பொக்கிஷம் என பாலுமகேந்திராவால் பரிந்துரைக்கப்பட்ட இந்நூல் 2007ம் ஆண்டின் சிறந்த நூலாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருதுபெற்றது. உதவி இயக்குனர்கள், சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாரட்டப்ப்ட்ட புத்தகம்

தம்மபதம்

யாழன் ஆதி தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். ரூ.130/-  

கடவுள் ஒரு கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு ஏ.எஸ்.கே ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

  யுகியோ மிஷிமா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது