தவளைகள் குதிக்கும் வயிறு

வா.மு.கோமு தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பிவிட்டுத் தான் தொப்புள் சுருங்கியது. ரூ.230/-

செம்பருத்தி பூத்தவீடு

கீரனூர் ஜாகிர்ராஜா எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச் செம்பருத்திப் பூ நாலஞ்சு. ரூ.140/-

குன்னூத்தி நாயம்

ஹரிகிருஷ்ணன் ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் ரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, எழுத்தாளன் என்பதை விட கூத்துக்கலைஞன் என்று சொல்லி கொள்வதே மிக உவப்பாக இருக்கிறது என சொல்லிக் கொள்ளும் ஹரிகிருஷ்ணனின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ரூ.120/-

காஃபிர்களின் கதைகள்

கீரனூர் ஜாகிர் ராஜா இந்தியாவைப் போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இதைப் போல நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது. ரூ.160/-

கனவினைப் பின் தொடர்ந்து…

தா.வெ. பத்மா தமிழில் : ஜே. ஷாஜஹான் இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன். ரூ.100/-

எருது : உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

மொழியாக்கம் : கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாடுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள். ரூ.120/-

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

வா.மு. கோமு இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரூ.100/-

தம்மபதம்

யாழன் ஆதி தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். ரூ.130/-  

கடவுள் ஒரு கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு ஏ.எஸ்.கே ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

  யுகியோ மிஷிமா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது