26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்

ஆசிரியர்: இந்திரா காந்தி 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத்திருந்து, 1993 தொடர் குண்டு வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்தியா… ரூ.65/-

பொறுப்பு மிக்க மனிதர்கள்

ஆசிரியர்: மனு ஜோசப் இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல். தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது. -டெஹல்கா ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தான் இருக்கின்றோம். -பிஸினஸ் ஸ்டேன்டர்டு. ரூ.250/-

வேர்கள்

அலெக்ஸ் ஹேலி தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன் ‘வேர்கள்’ இரு கண்டங்களின், இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் துயர்மிகு வரலாறு. 1976ல் ‘வேர்கள்’ வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ‘வேர்கள்’ இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50 க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. ரூ.999/-

வெண்ணிற இரவுகள்

ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி தாஸ்தோவ்ஸ்கியின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கல். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். ரூ.70/-

வடக்கேமுறி அலிமா

கீரனூர் ஜாகிர்ராஜா  இந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ரூ.100/-

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : சி. சீனிவாசன் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ரூ.550/-

மேலும் சில ரத்தக்குறிப்புகள்

ஆசிரியர்: குளச்சல் மு.யூசுப்   எல்.டி.டி.இயைப்பற்றியும் இலங்கை அரசியலைப்பற்றியும் சொல்லும் போது தம்மிகவின் குரல் தழுதழுத்தது ஒரு கட்டத்தில் அவர் சொன்னார், எல்.டி.டி.இ நீங்கள் நினைப்பதுபோல் வெறுமொரு கொரில்லா அமைப்பல்ல தங்களுக்கென்று காவல்துறையும் நீதிமன்றமும் பள்ளிக்கூடமும் மெல்லாமுள்ள இனை அரசாங்கக் கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் அது. மற்றொரு சந்தர்பத்தின்போது குறிப்பிட்டார். ரூ.60/-

மீன்குகைவாசிகள்

கீரனூர் ஜாகிர்ராஜா வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு. ரூ.190/-

மீன்காரத் தெரு

கீரனூர் ஜாகிர்ராஜா மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த வாய்ப்பிற்காக எப்போதும் நான் மகிழ்ச்சி கொள்ளவே வேண்டும். – கீரனூர் ஜாகிர்ராஜா ரூ.110/-